ஞாயிறு, நவம்பர் 02, 2008

கடவுள்

ஒரு இனிய கனவு.
இன்றைய கவலையை நேற்றுடன் சேர்க்கும்;
நாளை நல்லதாய் விடியும்.
கடவுள் ஒரு கனவு.

காயப்பட்ட மனதுக்கு ஆறுதல்;
சக நோயாளிகளின் கூட்டணியில்
சரியாகிவிட்ட பிரமை.
கடவுள் ஒரு அரு மருந்து.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சில கேள்விகள். . . .

அழுக்கு மூட்டை பாரத்தில்
நடக்க முடியவில்லை.
ஓடையோ வெகு தூரம்.
அடுத்தவர் அழுக்கா? என் உடமையா?
சுமப்பது யார் முடிவு?
சுத்தம் செய்வது யார்?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *