வெள்ளி, டிசம்பர் 12, 2008

பழையவை கை விடேல்

மரம் மறைத்தது மாமத யானை;
மரத்தில் மறைந்தது மாமத யானை.


இதை போல எத்தனையோ சிறிய சுவையான சிற்றொடர்களை படித்திருக்கிறோம். உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதிர்ந்து கொள்ளுங்களேன்.

ஞாயிறு, நவம்பர் 02, 2008

கடவுள்

ஒரு இனிய கனவு.
இன்றைய கவலையை நேற்றுடன் சேர்க்கும்;
நாளை நல்லதாய் விடியும்.
கடவுள் ஒரு கனவு.

காயப்பட்ட மனதுக்கு ஆறுதல்;
சக நோயாளிகளின் கூட்டணியில்
சரியாகிவிட்ட பிரமை.
கடவுள் ஒரு அரு மருந்து.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சில கேள்விகள். . . .

அழுக்கு மூட்டை பாரத்தில்
நடக்க முடியவில்லை.
ஓடையோ வெகு தூரம்.
அடுத்தவர் அழுக்கா? என் உடமையா?
சுமப்பது யார் முடிவு?
சுத்தம் செய்வது யார்?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ஞாயிறு, அக்டோபர் 26, 2008

பல விதமான Blogs பார்த்து படித்து எனக்கும் ஒரு சபலம். நானும் எழுத வேண்டும் என்று. இன்று முதல் தொடங்குகிறேன். முதலில் சில கவிதைகள். ( அட பாவி நீயுமா ?)

இவை எல்லாம் என்னுடைய கம்பெனி நண்பர்கள் என்னை கவிழ்த்து விட்ட போது எழுதியவை.

காலம் என்பது சுருக்கு கயிறு
கழுத்து நெரிப்பது தெரியாது!
தெரியும் சமயம்,
காலமும் இல்லை, கழுத்தும் இல்லை!
* * * * * ** * * * * ** * * * * ** * * * * ** * * * * *

நெடிய பயணத்தில்
நட்பு ஒரு சக பிரயாணி.
எங்கும் பிரியலாம்; எப்படியும் முடியலாம்.